அண்ணாமலை மற்றும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய வேண்டும் ஜி ஜி சிவா தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆருத்ரா நிறுவனத்தின் மோசடி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜி.ஜி. சிவா சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களின் முதலீட்டை வைத்து சுமார் 2300 கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தை ஏமாற்றி சுபயோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவன உரிமையாளர் ஹரிஷ் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்த பின்னும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவித்த பின்பும் பிரதமர் மோடி வரை அவரை அறிமுகப்படுத்தி அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
எனவே காவல்துறை பாஜக தலைவர் அண்ணாமலையையும் அமர் பிரசாத் ரெட்டியையும் ஆருத்ரா கோல்டு நிறுவன முறைகேடு குறித்து சாரிப்பதற்காக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கூறினார்.