Vijayadharani | விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக எம்எல்ஏவாக விஜயதாரணி இருந்து வருகிறார்.
ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணிக்கு தமிழக அரசியலை விட டெல்லி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
இந்த சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
மேலும் வசந்தகுமார் மறைவை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதையும் படிங்க: பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ!- கோவை மாவட்ட எஸ்.பி. விளக்கம்!
இதில் விஜயதாரணி எப்படியாவது போட்டியிட வேண்டும் என முயற்சித்தார்.
ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனையடுத்து கட்சி தலைமை மீது அதிருப்தியின் காரணமாக விஜயதாரணி தீவிர அரசியிலில் ஒதுங்கி இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757706224374612187?s=20
இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என,காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரை சந்தித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்களுக்கு(கடந்த தேர்தலில் வென்ற ஒரு சட்டமன்ற உறுப்பினர்) எம்.பி., தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.
இதையும் படிங்க:Assembly Issue பாஜகவுக்கு அமைச்சர் பதிலடி
இடைத்தேர்தலுக்கு செலவு செய்ய தி.மு.க., விரும்பவில்லை என்பதால் சீட் கிடையாது என, விஜயதாரணியிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் 25ம் தேதி, பல்லடத்தில் நடக்க உள்ள, தமிழக பா.ஜ., அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு விழாவில்,
பங்கேற்கும் பிரதமர் மோடி முன்னிலையில், பா.ஜ., வில் விஜயதாரணி(Vijayadharani) இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து பேச நேற்று முன்தினம் விஜய தாரணி டில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.