தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில், ராகுல் காந்தி தொடங்கிய யாத்திரையை நாடு தழுவிய நடைபயணமாக மேற்கொண்டு வருகிறார். தற்போது, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இன்று காலை தனது நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கியிருக்கிறார். இந்த நடைப் பயணத்தில், அம்மாநிலத்தை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவர்களும் (congress mp) பங்கேற்றுள்ளனர்.
இந்த நடைபயணம் பில்லௌர் பகுதியை அடைந்த போது அதில் பங்கேற்ற காங்கிரஸ் மக்களவை எம்பி (congress mp) சந்தோக் சிங் சவுத்திரி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சந்தோக் சிங் பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, தனது நடைப்பயணத்தை ரத்து செய்த ராகுல் காந்தி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
இந்நிலையில், எம்பி சந்தோக் சிங்கின் மறைவுக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.