திமுக எம்பி தயாநிதி மாறன்(dayanidhi maran) மனைவியிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும்,திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் இருந்து வருகிறார். இவருக்கு பிரியா தயாநிதி மாறன் என்ற மனைவியும் கரண் மாறன் என்ற மகனும், திவ்யா மாறன் என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று தயாநிதி மனைவி மாறன் பிரியா தயாநிதி மாறனிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி 99000 ஆயிரம் ருபாய் மர்ப நபர்களால் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரில்,வெளிநாடுகளில் இருந்து பேசுவது போல் குறிப்பிட்ட எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இரண்டு முறை அழைப்பை துண்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக வந்த அழைப்பை எடுத்து பிரியா தயாநிதி மாறன் எடுத்து பேசியுள்ளார்.
அப்போது அந்த மர்ப நபர் இந்தியில் பேசியதாகவும், வங்கி தொடர்பான தகவல்களை அறிய முற்பட்டதாகவும் தெரிகிறது.இதற்க்கு தனக்கு ஏதும் தெரியாது வங்கி தொடர்பாக தன் கணவரிடம் கேட்டு அறிந்துகொள்ளுமாறு பேசி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து தயாநிதி மாறின் ஆக்சிஸ் வாங்கி கணக்கில் இருந்து 99000 ஆயிரம் லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தயாநிதி மாறன் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.