டெல்லியில் விவசாயிகள் போராட்டம் சூடு பிடித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இருந்த பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னால் முதல்வரின் மனைவியுமான பிரனீத் கவுர் திடீரென (punjab Congress mp) இன்று பாஜகவில் இணைந்துள்ளது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர். காங்கிரஸ் எம்பியாக இருக்கும் இவர், கடந்த ஆண்டு பாராளுமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரினாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டிருந்தார். ஆனாலும், எம்.பி. பதவி வகித்து வந்த அவர், ‘விரைவில் பாஜகவில் சேருவார்’ என எதிர் பார்க்கப்பட்டது. ஆனாலும், அது தாமதமாகை வந்த நிலையில், பிரனீத் கவுரின் மகளான ஜெய் இந்தர் கவுர் பாஜக சார்பாக வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என கூறி வந்தனர் அவரது ஆதரவாளர்கள்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேஸிய ஜெய் இந்தர் கவுர், ‘”லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது தாய் பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவார். இதற்காக அவர் விரைவில் பாஜகவில் சேருவார். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு நான் அரசியலில் ஈடுபடுவேன். 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்புள்ளது.
முதன் முதலில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது எனது தந்தைதான்’ ஆனால், எனது தந்தை அமரீந்தர் சிங்கிடம் இருந்து முதல்வர் நாற்காலியை பறித்தது காங்கிரஸ் கட்சி. அவருக்குப் பதிலாக சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார்” என காங்கிரஸ் கட்சியின் மீதான தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார் ஜெய் இந்தர் கவுர்.
இதையும் படிங்க: “ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமே..!” -பரபரப்பு அறிக்கை தாக்கல்!
விவசாயிகள் அதிர்ச்சி
ஜெய் இந்தர் கவுரின் அந்த பேட்டியானது, பஞ்சாப் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் டெல்லியில் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் பிரனீத் கவுர். மோடியின் தலைமையில் எனது தொகுதி, மாநிலம் மற்றும் நாட்டிற்காக பாடுபடுவேன் எனக் கூறியுள்ள பிரனீத் கவுருக்கு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாட்டியாலா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறுகிறது பிஜேபி தரப்பு.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பஞ்சாப் சண்டிகார் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு தார்மீக ரீதியிலான ஆதரவை அளித்து வந்த காங்கிரஸ் எம்.பி.யான பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்தது அம் மாநிலங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் சேர காரணம்
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மஹுவா மொய்த்ரா. இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராகவும் கேள்விகளை எழுப்பியதோடு, இருவர் குறித்தும் மக்களவையில் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார் மொய்த்ரா.
இந்தகேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும்மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
காட்டிக் கொடுத்த காதலர்
மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக பாஜக எம்பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. கடந்த நவம்பர் 9-ம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது மஹுவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக 30 நிமிடங்கள் விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. திரிணமூல் எம்பிக்கள் பேசும்போது, “500 பக்க அறிக்கையை சில மணி நேரங்களில் படிக்க முடியாது. 3 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரினர். இதை அவைத்தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை. விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கோரினார்.
இதற்கு அவைத் தலைவர் பதிலளித்தபோது, “நெறிமுறைகள் குழுவின் விசாரணையின்போது மொய்த்ரா தனது கருத்தை பதிவுசெய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை” என்று தெரிவித்தார்.
பதவி பறிப்பு
சுமார் 30 நிமிட விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை எம்பிக்களின்ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிகாரபூர்வமாக பறிக்கப்பட்டது.
பாஜகவில் இணைப்பு
அப்போது நடந்த அந்த வாக்கெடுப்பில் தோழமை கட்சியின் பெண் எம்.பி. ஒருவர் மீதான அபாண்டமான குற்றச்சாட்டிற்கு கட்சியின் விதிகளை மீறி அவருக்கு எதிராக வாக்களித்தார் பிரனீத் கவுர். எனவே, கட்சியின் சட்ட விதிகளை மீறி நடந்தார் என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்திருந்தது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில்தான் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த அவர் டெல்லியில் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.