உலக சர்ச்சை நாயகனாக சமீபத்தில் அறியப்படும் எலான் மஸ்க் செய்யும் கேலி, கிண்டல் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக அவரை கடுமையாக விமர்சனம் அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு கண்டெண்ட்டை கொடுத்து ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நிலையில், ட்விட்டர் உரிமையாளரானது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே, மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் பணி நீக்கம். ப்ளு டிக் வசதிக்கு சந்தா என பல மாற்றங்களை கொண்டு வருகிறார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் வரும் நிலையில், மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிவிட்டரின் எலோன் மஸ்க் செய்யும் அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், தனது செல்ல பிராணியான பிளாக்கி என்ற வளர்ப்புப் பிராணியை ட்விட்டரின் புதிய சி.இ.ஓ. என அறிமுகப்படுத்தியிருப்பது டுவிட்டர் வாசிகள் மத்தியில் ஒருபுறம் கோபத்தையும், மறுபுறம் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
The new CEO of Twitter is amazing pic.twitter.com/yBqWFUDIQH
— Elon Musk (@elonmusk) February 15, 2023
தனது ட்விட்டரில் எலான் மஸ்க் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், சி.இ.ஓ. நாற்காலியில் ஃப்லோக்கி அமர்ந்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருக்கும் பிளாக்கியின் முன் இருக்கும் மேஜையில் சி.இ.ஓ. என்று எழுதியுள்ளது.அந்த மேஜையில் சில ஆவணங்கள் பரப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மேலும் எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள புகைப்பட ட்வீட்டை சுமார் 20 ஆயிரம் பேர் லைக் செய்து 10.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளனர்.இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சிலருக்கும் முகச் சுளிப்பை ஏற்படுத்தும் இந்தப் பதிவுக்கு சிலர், நாய் வாலை நிமிர்த்த முடியுமா? என்றும் டிவிட் செய்து வருகின்றனர்.