ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் ( Air India ) ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளன. மேலும் முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
பெங்களூரு – டெல்லி, கோழிக்கோடு – துபாய், குவைத் – தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியில் உள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு ( Air India ) எடுத்துள்ளதாகவும் விடுப்பு எடுத்த ஊழியர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.