குடியரசு தினவிழா (Republic day) ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதற்கான விழா மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே நடைபெற உள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவையொட்டி ரயில் நிலையங்கள், கோயில்கள், ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://x.com/ITamilTVNews/status/1750395228958421120?s=20
இந்த நிலையில், சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதுமே 7500 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பிற்காக கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,250 ரெயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகர் முழுவதும் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : journalist மீது கொலை வெறித் தாக்குதல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், துரைப்பாக்கம், நீலாங்கரை ,திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பாது காப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
காவல் அதிகாரிகளின் வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு, மோப்பநாய் பிரிவு, மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை பிரிவினருடன் நாச வேலை தடுப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் குடியரசு தினத்தை (Republic day) முன்னிட்டு ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.