Lulu Mall-சென்னை கோயம்பேட்டில் லுலு மால் அமைய உள்ளதாக செய்திகள் வைரலான நிலையில், தற்போது அது வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்தே இயங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருந்து வந்தது.
பல ஆண்டுகளாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள், போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி, பொது மக்களுக்கு இடையூறாகவே இருந்து வந்தது.
இந்த தொடர் பிரச்சனையை சரி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுபுதிய பேருந்து நிலையத்தை அமைக்க திட்டமிட்டது.
அதன்படி கிளம்பாக்கத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க :Palani Murugan Temple- ”இந்து அல்லாதோருக்கு அனுமதியில்லை…” நீதிமன்றம் உத்தரவு!
ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாக அறியப்படும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை தனியாருக்கு கொடுக்கப்போவதாகவும்,
அங்கே லுலு மால் அதாவது (வணிக வளாகம்) வரப்போவதாக செய்தி ஒன்று வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோயம்பேட்டில் லுலு மால்(Lulu Mall) (வணிக வளாகம்) என்ற செய்தி வைரலான நிலையில், தற்போது அது வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க :
https://x.com/ITamilTVNews/status/1752200004914295234?s=20
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம்
அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் 66.4 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற இண்ட பொய்த்த்கலை உண்மை என்று நம்பி, அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு வீட்டுவசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி, இந்த தகவல் அனைத்து முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.