Fishermen-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன.
இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 350 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 43) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், அதே பகுதியை சேர்ந்த கலையரசன் (23), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45) ஆகிய 6 மீனவர்களும்,
ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து முருகானந்தம் (40) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், அதே பகுதியை சேர்ந்த விசாகலிங்கம் (50), நயில் (21), பாரதிதாசன் (52), சசிகுமார் (25), ரவி (26) ஆகிய 6 மீனவர்களும் என மொத்தம் 12 மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
Also Read :https://itamiltv.com/100-celebrities-from-55-countries-participated-in-inauguration-of-ram-temple/
12 மீனவர்கள் கைது:
இவர்கள் சுமார் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 12 பேரையும் இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்களை ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இந்த நிலையில்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1746104927108432355?s=20
அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் 13.01.2024 அன்று நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று, இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்களையும் Fishermen அவர்களது மீன்பிடிப் படகுகளையும்,
உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.