அதிமுகவின் முதுகில் பாஜக சபாரி செய்யக் கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூற வேண்டும் என்று காயத்ரி ரகுராம் (Gayathri Raghuram)தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் தென்னரசுவை விட திமுக வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இது குறித்த கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
தோல்வியை ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறோம். பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும். இது வாங்கப்பட்ட வெற்றி என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் கருத்திற்கு காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பக்கத்தில்,
ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கூட்டணி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இடைத்தேர்தலில் பணியாற்றக் குழு நியமித்தார். ஏற்கனவே அண்ணாமலையின் எண்ணம் தெளிவாக உள்ளது. இவ்வளவு வம்புப் பேச்சுக்குப் பிறகு குழப்பத்தை ஏற்படுத்தி இப்போது அதிமுகவை ஆதரிக்கக் கூட அவருக்குத் தகுதி இல்லை.
மேலும் பாஜக மீதான நம்பகத்தன்மையை எழுது வருகிறது அதிமுக எல்லாவற்றிற்கும் காரணம் அண்ணாமலை என்று தெரிவித்த காயத்ரி. இந்த நோக்கத்தில் அண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியும் அண்ணாமலை தனது வாய் சவுடாலுக்காகக் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பாஜக கப்பலை மூழ்கடிக்கிறார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் அதிமுக நம்பி ஓட்டு வாங்காமல் பாஜக கலத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று தமிழக பாஜகவுக்கு இபிஎஸ் ஐயா அறிவுரை கூற வேண்டும். அதிமுகவின் முதுகில் பாஜக சபாரி செய்யக்கூடாது என்று அறிவுரை கூற வேண்டும்.
https://twitter.com/Gayatri_Raguram/status/1631282121263423489?s=20
அதிமுக ஒற்றுமை பற்றி கருத்துச் சொல்லாமல் அண்ணாமலை தான் அதிகாரப்பூர்வமாகத் தான் எதிர்க்கட்சி என்று கூறுவதற்கு முதலில் போட்டியிட்டு இருக்க வேண்டும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அதிமுக தான் எதிர்க்கட்சி அண்ணாமலை பொய் மற்றவர்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை மூன்று விமர்சித்துள்ளார்.