பாமகவில் தற்போது சலசலப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இவ்விவகாரம் குறித்து அக்கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வர். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமுகம் ஏற்படும்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம் என தெரிவித்தார்.
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி தானே தலைவர் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.