திருநெல்வேலி பேட்டையில், 90 வயது மூதாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பேத்திகளை, போலீசார் கைது செய்தனர்.
பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் ஆதம்நகரில் மே 3 ஆம் தேதி பகலில் ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள், ஒரு பெண்ணை இறக்கி சாலையோர குப்பைக்கு நடுவில் வீசி, பழைய துணிகளை அவர் மீது போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து கருக்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆராய்ந்த போது, கொல்லப்பட்டது மூதாட்டி என்பதும், அவரை ஆட்டோவில் அழைத்து வந்த இரு பெண்கள் தீ வைத்து கொன்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து குறித்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சம்பவ இடத்தில் மூன்று பேரை இறக்கி விட்டதை ஆட்டோ ஓட்டுனர் ஒப்புக் கொண்டார்.
அதனைத்த் தொடர்ந்து மூதாட்டியை கொன்ற இரு பேத்திகளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பேட்டை கிருஷ்ண பேரியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள். 90 வயதான மூதாட்டி வயோதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை, மகள் வழி பேத்திகள் மாரியம்மாள், மேரி இருவரும் கவனித்து வந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுப்பம்மாளை, மருத்துவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
அதன்படி, அவரை இரு நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ள மூதாட்டியின் பேத்திகள் உயிருக்கு போராடிய மூதாட்டிய ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். பேத்திகள் தன் மீது பெட்ரோல் ஊற்றும் போது, ‘என்னை கொல்லப் போகிறீர்களா?’ என, பரிதாபமாக கேட்ட மூதாட்டி வயோதிகம் காரணமாக சத்தம் போடாமல் தீக்கு இரையாயுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
வயோதிபத்தால் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மூதாட்டியை அவருடைய பேத்திகளே ஈவு இறக்கம் இன்றி பெட்ரோல் ஊற்றிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.