தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில்..
வணிக வரித்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான ஐஏஎஸ் அதிகாரி தீரஜ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலரான ஐஏஎஸ் அதிகாரி ஜெ.குமரகுருபரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சுற்றுலாத் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்படுகிறார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
