President Draupadi Murmu-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமும் சாதி பாகுபாடு தொடர்வதாக தூத்துக்குடி மக்களவை வேட்பாளர் கனிமொழி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதானது வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், துணை ஜனாதிபதி ஜகதீப் டங்கர், எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாகூர் ஆகிய 5 பேருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது.அதற்கான விருதுகள் விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 2 தினங்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது. அதில், விருதாளர்களின் குடும்பத்தினர் பங்கேற்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதுகளைப் பெற்று சென்றனர்.
ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத எல்.கே.அத்வானிக்கு மறுநாள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவே அவரது வீடு தேடி நேரில் சென்று பாரத ரத்னா விருதினை வழங்கினார். இந்த நிகழ்வின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படமும் செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானது. அதில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நின்று கொண்டிருக்க, விருதாளர் எல்.கே.அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்தனர். இது தற்போது சர்சையைக் கிளப்பி உள்ளது.
அதாவது, ‘திரௌபதி முர்மு பழங்குடியினர் என்பதால் அவர் மீது சாதிப்பாகுபாடு காட்டப்படுவதாகவும், அதனால்தான் அவரை அமர வைக்கவில்லை’ என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.இந்த நிலையில்தான், தூத்துக்குடி மக்களவை தொகுதி வேட்பாளரும் எம்.பியுமான கனிமொழியும், குடியரசுத்தலைவர் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை பதிவேற்றிய கனிமொழி, “தங்கள் மீது காட்டப்படும் அப்பட்டமான அவமரியாதையால் ஆழ்ந்த வருத்தம். பாஜக ஆட்சியின் கீழ், நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” என்று தனது பதிவில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி திரெளபதி முர்மு முன்பு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட போதே, “திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என இயக்குனர் ராமகோபால் வர்மாவின் டீவீட் சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் உள்ள ஜெகநாதர் ஆலய கருவறைக்கு வெளியில் நின்றபடியே ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி, “பட்டியல் இனத்தவர் என்பதால் ஜனாதிபதியே புறக்கணிக்கப் படுகிறார்” என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதற்கு சற்று முன்பாகத்தான், கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்ட்ட திறப்பு விழாவிற்கு நாட்டின் ஜானாதிபதி என்ற முறையில்கூட முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட விசயம் பரபரப்பை கிளப்பியது. தற்போது, எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் துணை ஜானதிபதி ஜகதீப் டங்கர் மற்றும் பிரதமர் ஆகியோர் அமர்ந்திருக்க, ஜனாதிபதி திரௌபதி முர்மு மட்டும் அமர்ந்தபடி இருக்கும் அத்வானிக்கு நின்றபடி விருது வழங்கிய புகைப்படம் வெளியாகி மீண்டும் பட்டியல் இனப் பிரச்சனையை பரவ விட்டுள்ளது.