சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (vetri duraisamy) தனது படத்திற்கு லொகேஷன் பார்க்க திருப்பூரை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு வாடகைக்கு காரை எடுத்த அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது போது ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் 200 அடி உயரத்தில் இருந்து சட்லஜ் ஆற்றுக்குள் விழுந்தது.
தகவலறிந்த விரைந்து சென்ற போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் காரை கயிறு கட்டி மீட்ட போது அதில் ஓட்டுனர் டென்சின் உயிரிழந்திருந்த நிலையிலும், கோபிநாத் காயங்களுடனும் மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க : cotton candy banned: உயிரை பறிக்கும் பஞ்சு மிட்டாய்- புதுச்சேரி அரசு அதிரடி
மாயமான வெற்றியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வெற்றியின் ஐஃபோன் கிடைத்துள்ளது. ஆழ்கடல் நீச்சல் வீரர்களை வைத்து 3 கி.மீ. தூரத்திற்கு தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
பாறை இடுக்குகளில் மூளை திசு கிடைத்துள்ளது. இது வெற்றியுடையதா என அறிய டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைகப்ட்டுள்ளது. சைதை துரைசாமியின் டிஎன்ஏவும் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் முடிவுகள் வந்தால் மட்டுமே வெற்றியின் (vetri duraisamy) விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும் என போலீஸார் கூறுகின்றனர்.
சட்லஜ் ஆற்றில் எப்போதும் நீரோட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆற்றில் சிக்கியவர்களில் வெகு சிலரது உடல் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
https://x.com/ITamilTVNews/status/1755900129562054987?s=20
இந்த நிலையில் நேற்று முன் தினம் வெற்றி துரைசாமியின் சூட்கேஸ், உடமைகள் கிடைத்துள்ளன. இன்று 6 வது நாள் ஆகியும் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பின் சீட்டில் அமர்ந்திருந்த கோபிநாத் சீட் பெல்ட் அணிந்திருந்ததகவும், ஆனால் வெற்றி துரைசாமி சீட் பெல்ட் அணியவில்லை என்றும்,
ஒரு வேளை வெற்றியும் சீட் பெல்ட் அணிந்திருந்தால் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.