Kasthuri press meet –திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி யாரும் இல்லை என செய்தியாளர்களிடம் நடிகை கஸ்தூரி பேசிய போது கூட்டத்தில் இருந்து நைசாக நழுவிச் சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தில்,” 2024 ஆம் ஆண்டுகான பாராளுமன்ற தேர்தல் பிரச்சார துவக்க விழாவாக ‘இந்து மக்கள் கட்சி சார்பில் ”வேண்டும் மோடி மீண்டும் மோடி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: “தேர்தல் ஆணையர் பதவி விலகியது இதற்குத்தான்!”-செல்வப்பெருந்தகை அதிரடி
அப்போது தமிழகத்தில் அரசியல் சூழலில் மாற்றம் இல்லை அதே குழப்ப சூழ்நிலை நிலவி வருகிறது. தற்பொழுது தான் திமுகவின் தொகுதி பங்கீடு பேசுவார்தை நிறைவடைந்துள்ளது. மற்ற கட்சிகள் தொகுதி பங்கீடு இழுபறியில் தான் உள்ளது.
மேலும் வரும் 18 ஆம் தேதிக்குள் அனைத்து நிலவரங்களுக்கும் தெரியவரும் என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டணியில் திமுக வலுவாக உள்ளதாகவும், தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் குறித்த செய்தியாளர் கேள்விக்கு,” உண்மை தான் திமுக வெற்றி பெரும் .
இதையும் படிங்க: BREAKING | CAA-வை அமலுக்கு கொண்டு வந்தது ஒன்றிய அரசு!
திமுக வலுவாக உள்ளது. இதுவரை திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி யாரும் இல்லை .ஆனால் திமுகவிற்கு அடுத்தபடியாக யார் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தேர்தல் அமையும் என தெரிவித்தார்.
தொடர்ந்து,பாஜக திமுக கூட்டணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு,” அதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்தார்.பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி திமுகவிற்கு ஆதரவாக பேசியதால் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் முகம் மாறிய நிலையில் அப்போது நடிகை கஸ்தூரி (Kasthuri press meet) பின்னர் நின்று கொண்டு இருந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்,”உடனே, கூட்டத்தில் இருந்து நைசாக நழுவிச் சென்றார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.