புதிய யானைகள் வழித்தட வரைவு குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள ( New Elephant Route ) சில முக்கிய பரிந்துரைகள் வெளியாகி உள்ளது.
யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது, நெருக்கடியான யானை வழித் தடத்தை அடையாளம் காணுவது, யானைகளின் வழித்தடத்துக்கான உடனடி மேலாண்மை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய யானைகள் வழித்தடத் திட்டத்தினை மேற்கொள்ள அரசின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான வரைவு அறிக்கையும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது .
இந்த வரைவு அறிக்கை குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த புதிய யானைகள் வழித்தட வரைவு அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள் குறித்து பார்க்கலாம்.
மசினகுடி-உதகை பாதையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது, உதகை செல்ல கூடலூர் பாதையைப் பயன்படுத்த வேண்டும்.
Also Read : ஏழைகளுக்கு எது கொடுத்தாலும் மோடிக்கு வயிறு எரியும் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்..!!
யானைகள் செல்ல அதிக பாலங்கள் கட்டப்பட வேண்டும்.
வழித்தடத்தில் உள்ள இரும்புக்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
பொக்காபுரத்தில் உள்ள நீலகிரி மலைச் சரிவுகள் முதல் மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (ESA- Eco sensitive areas) அறிவிக்கப்படும்.
யானைகள் வழித்தடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக இருக்கும் அனைத்து நெருக்கடியான பகுதிகளும் (Bottle neck points) சரிசெய்யப்பட வேண்டும்.
முக்கிய நெருக்கடி பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி, மனித வாழ்விடங்களை அகற்ற வேண்டும்.
அதேபோல கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
குத்தகை காலம் முடிந்த தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
யானை-மனித மோதல்களைத் தவிர்க்க புதிய கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.
தேயிலைத் தோட்ட நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகில் ( New Elephant Route ) உள்ள செக்ஷன் 17 நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.