Kodanadu Estate Case-கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை , வரும் பிப். 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நேற்று விசாரனைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் விஜயன்,முனிரத்தினம் ஆகியோர் ஆஜராகினர்.
இதையும் படிங்க: TN Fishermen arrested :”உடனே Action எடுங்க பிரதமரே..” -முதல்வர் ஸ்டாலின்!
மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் குற்றம் நடந்த இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்வதற்காக, விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைத் தன்மை குறித்து சிபிசிஐடி காவல்துறையினரிடம் , மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: ADMK VS BJP-”BJP-யில் இருந்து விலக இதுதான் காரணம்..” மனம் திறந்த EPS!
இதனை தொடர்ந்து,வழக்கு (Kodanadu Estate Case) தொடர்பான தொலைத்தொடர்பு சாதனங்களின் அறிக்கைகள் நீதிமன்றத்துக்கு வந்தவுடன், அதன் நகல்களைப் பெற்றுக்கொண்டு,
சிபிசிஐடி காவல்துறையினர் தலைமையில் விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1756174635488641165?s=20
எதிர்தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறியதாவது : “கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில், பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
மேலும், பல்வேறு துறைகளின் ஆய்வு நடக்க இருப்பதால், குற்றம்நடைபெற்ற இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.
PUBLISHED BY : S.vidhya