கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் கோவில் திருவிழாக்கள், பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் வேறு ஒரு நாள் பனி நாளாக அறிவிக்கப்படும். இந்த அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிச.4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமை ஆலயமாக விளங்கும் இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24ம் தேதி முதல் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நவம்பர் 24ம் தேதி தொடங்கியது. கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக டிசம்பர் 16-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளது.

1544 இல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் நிறுவப்பட்ட இந்த ஆலையத்தில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் பூதஉடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலையத்தில் ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுவதால் இவ்வாலயத்தை பொதுமக்கள் கேட்ட வரம் தரும் கோட்டாறு சவேரியார் என்று அழைக்கின்றனர்.