2 ஆம் கட்ட லோக்சபா தேர்தலை முன்னிட்டு 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு (2nd Phase Election) நடைபெற உள்ளது . இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நம் பாரத நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் நாடே விழா கோலம் கொண்டுள்ளது.
நாட்டில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்தும் தங்களது சக்திக்கு மீறி மக்களின் மனதை கவர வீதியில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கடந்த 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் உரிய பாதுகாப்புடன் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
Also Read : பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல் தண்டனை..!!
இந்நிலையில் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் . சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் உள்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மாவோஸ்டுகளின் நடமாட்டம் அதிகம் இடங்களையும் ( 2nd Phase Election ) கணித்து வைத்துள்ள காவல்துறையினர் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.