பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் 2021 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேன் மோசடி செய்ததாக மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளித்திருந்தார்.
அந்த கடிதத்தில், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க இருப்பததாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து ரூ.16 கோடி மோசடி பெற்றுள்ளார் என்றும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து பாலாஜி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.