Madurai AIIMS | மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டிய ஐந்து ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை மஹாராஷ்டிரா ,தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அமைக்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
இதையடுத்து, தமிழ்நாட்டின் 5 இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, 221 ஏக்கரில், ரூ.1,265 கோடி நிதியில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018 ஜூனில் முடிவானது.
இந்த அறிவிப்பு இழுத்தடிக்கப்பட்ட நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை வந்த பிரதமர் மோடி, 2019, ஜன.27ல் அடிக்கல் நாட்டினார்.
இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டிற்கு வருமென அறிவித்த நிலையில், தற்போது 5 ஆண்டுகள் கடந்துள்ளது. அறிவிப்பு வெளியான 2015ல் இருந்து தற்போது 9 ஆண்டுகளாகி விட்டது.
இதையும் படிங்க: JustNow | மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்
சுற்றுச்சுவர் பணி முடிந்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ்Madurai AIIMS மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் தொடங்கின.
கட்டுமானப்பணிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள எல் அண்ட் டி நிறுவனம், வாஸ்து பூஜையுடன் பணிகளை தொடங்கியுள்ளது.
கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.
33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.