மகாளய அமாவாசையை(mahalaya amavasai) முன்னிட்டு வரும் 13ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
முன்னோர் வழிபாட்டின் சடங்குகள், மஹாலயா சர்வ பித்ரு அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மஹாளயா அமாவாசை திதியில் அந்த முன்னோர்களை வழிப்பாட்டு உரியவர்களாக கொண்டுள்ளன. இந்நாளில் நம் முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானது.
குறிப்பாக புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் மஹாளய அமாவாசை என 13 ஆம் தேதி மற்றும் 14/10/2023 (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.மகாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
14/10/2023 (சனிக்கிழமை) மகாளய அமாவாசையை 13/10/2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது .
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் மகாளய அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் .
இதன்படி வருகின்ற 14/10/2023 அன்று மகாளய அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

இதனடிப்படையில் வருகின்ற 13/10/2023 வெள்ளி கிழமை அன்று சென்னை ,சேலம் ,கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 14/10/2023 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை ,சேலம்,கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது .
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது . இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.