மணிப்பூரில் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்லமாக கூட்டிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
மணிப்பூர்(Manipur) மாநிலத்தில் கடந்த மே மாதம் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறி உள்ளது.இந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,250க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவ பாதுகாப்பு அமைக்கப்பட்ட போதிலும் நிலைமை மோசமாகி வருகிறது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/07/image-525.png?resize=1024%2C576&ssl=1)
இந்த நிலையில் கடந்த மே மாதம் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அது தொடர்பான வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவது கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2023/07/image-526.png?resize=1024%2C576&ssl=1)
இந்த நிலையில் மணிப்பூரை சேர்ந்த இரு பெண்களை நிர்வாணபடுத்தி அழைத்து சென்ற சம்பவத்திற்கு தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினர் குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
எந்தவொரு சூழ்நிலையிலும், அத்தகைய குற்றமானது அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையைத் தவிர வேறு எதையும் கேட்காது. இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும், பார்ப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வகுப்புவாத கலவரங்கள், குடும்ப சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல், பழிவாங்குதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள், பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
சில மனிதர்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், அழுகியவர்கள் மற்றும் மனிதாபிமானமற்றவர்கள் என்று இது காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.