பிரபல எழுத்தாளர் மாயா ஏஞ்சலாவின் உருவம் பொறித்த டாலர் நாணயத்தை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல் பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலா. கருப்பின பெண்ணான இவர், கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.
அமெரிக்காவில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட இனவெறி தாக்குதல், மற்றும் பாலியல் வன்கொடுமைகள், அவற்றிலிருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதித்த கதையை ‘கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்கு தெரியும்’ என்ற தனது சுயசரிதையில் விரிவாக எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் மாயா ஏஞ்சலோவுக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவத்தை பெற்று தந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது மாயா ஏஞ்சலாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்க அரசு மாயா ஏஞ்சலாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில், அரசு வெளியிட்டிருக்கும் டாலர் நாணயத்தில் மாயா ஏஞ்சலாவின் பெயரையும், அவரது உருவத்தையும் பொறித்து கெளரவித்துள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக கருப்பின பெண்ணின் உருவமும், பெயரும் நாணயத்தில் பதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மாயா ஏஞ்சலா கடந்த 2014 ஆம் ஆண்டு, தனது 86வது வயதி இறந்தார். கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க 1/4 டாலர் நாணயத்தில், அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாசிங்க்டன் உருவமும், மற்றொரு புறத்தில் கழுக உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 90 ஆண்டுகளில் முதல் முறையாக மாயா ஏஞ்சலாவின் உருவம் அமெரிக்க நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.