சென்னை புழுதிவாக்கம், பி.ஏ. நடராஜன், மணிமேகலை தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வரும் இப்பகுதியில், நள்ளிரவில் அழகான உடையுடன் முகமூடி(Mask robbers) அணிந்து வரும் அடையாளம் தெரியாத கும்பல்,
அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டம் இட்டு, தொடர் வழிபறி கொள்ளையில் ஈடுப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக, கீழ்க்கட்டளை காவல் நிலையத்தில் தொடர் புகார் அளிக்கப்பட்டு வந்தது.
இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் வகையில், தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அப்பகுதி வாசிகள் தரப்பில் கீழ்க்கட்டளை காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்த நிலையில்,
இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக, அப்பகுதி வாசிகள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தாங்களே இப்பகுதிக்கு பாதுகாப்பாக இருப்போம் என, தெருத் தெருவாக சுற்றி வந்து தங்களைப் பாதுகாத்து வரும் விஷயம் போலீசாரை மேலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி உள்ளது.
கதவுகளை தட்டி பொதுமக்களின் உடைமைகளை, அச்சுறுத்தி வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபரின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தும்,
இதுவரை எந்த ஒரு வழிபறிக் கொள்ளையரும் கைது செய்யப்படவில்லை என்பது, பொதுமக்களின் மத்தியில் ஓர் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.