ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில்(Migjam relief amount ) ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல், சென்னையையே புரட்டு போட்டது. சென்னை மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சென்னை உட்பட 4 மாவட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ 6 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து இருந்தார்.
அதன் படி பாதிக்கபட்ட மக்களுக்கு நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு, கடந்த 17 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை விநியோகப்பட்டது.
இந்தத் தொகை நியாயவிலை கடைகள் மூலம் சென்னையில் உள்ள ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதே போல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கபட்ட மக்களுக்கு மட்டும் ரூ 6 ஆயிரம் (Migjam relief amount ) வழங்கப்பட்டது.
இதனை அடுத்து கனமழை, புயலால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேரும் இந்த நிவாரணத் தொகையை கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1755510494000218559?s=20
குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளதால், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : Alwa கொடுத்த திமுகவினர் – மத்திய அரசைக் கண்டித்து நூதன போராட்டம்!
முன்னதாக குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் தனித்தனியாக விண்ணப்பித்து,
தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விவரங்கள் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது.
நிவாரண தொகை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.