நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இறுதி சடங்கில் அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக இருந்து வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சென்னை தீவுத்திடலில் இருந்து தற்போது இறுதி ஊர்வலம் புறப்பட்டு நடைபெற்று வருகிறது பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு செல்கிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .