திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளின் (Bail dismissed) ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அப்பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை .
இரவு பகலென்றும் பாராது ஓய்வில்லாதவகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாது, நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
அந்த இளம் பெண்ணை தினந்தோறும் துன்புறுத்தி வந்த அக்குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது என அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இக்கோரத்தாக்குதல்களும், வன்முறைவெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றங்களாகும்.
துன்புறுத்திய சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மற்றும் மகனை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர் .
இதையடுத்து மகன் மற்றும் மருமகளை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் அவர்களை வேற்று ,மாநிலத்தில் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர் .
இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இதையடுத்து அவர்கள் இருவரும் தனக்கு ஜாமீன் வேண்டி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று அவர்களது ஜாமீன் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை (Bail dismissed) தள்ளுபடி செய்தனர் .
இருவரும் தங்களுக்கு ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read : https://itamiltv.com/one-month-leave-for-auto-shankar-brother/
பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆண்டோ மதிவாணன், மனைவி மெர்லினாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதெற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இந்த இருவருக்கும் ஜாமீன் கிடைக்கேவே கூடாது . இளம் பெண்ணுக்கு செய்யக்கூடத்தை கொடுமைகளை செய்துள்ளனர்.
சட்டம் நிச்சயம் அவர்களை தண்டித்தே ஆக வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.