உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று புனித மீராபாயின் 525வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,அமைச்சர் ,அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினியின் நாடகம் அரங்கேறியது. ஒன்றரை மணி நேரம் நாடகத்தில் நடித்து ஹேம மாலினி நடனமாடினார்.
இதனை, பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,””‘பாரதம்’ எப்போதும் பெண்களை வணங்கும் நாடாக இருந்து வருகிறது.
அவர்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் சமூகத்தை வழிநடத்தியிருக்கிறார்கள், இதற்கு சாண்ட் மீராபாய் ஒரு உதாரணம்,” என்று கூறினார்.
தொடர்ந்து சமூகத்திற்கு மீராபாய் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் மோடி, “அந்த காலகட்டத்தில் சமூகத்திற்கு மிகவும் தேவையான பாதையை துறவி மீராபாய் காட்டினார்.
இந்தியாவின் இக்கட்டான காலங்களில், பெண்களின் தன்னம்பிக்கைக்கு வழிகாட்டும் சக்தி உள்ளது என்பதை மீராபாய் போன்ற துறவி காட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், மீராபாயின் 525வது பிறந்தநாள் ஒரு துறவியின் பிறந்தநாள் மட்டுமல்ல. “இது இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் கொண்டாட்டம், இது காதல்-பாரம்பரியத்தின் கொண்டாட்டம், இந்த திருவிழா பக்தர் மற்றும் கடவுள் இடையே வேறுபாடு இல்லாத எண்ணத்தின் கொண்டாட்டம்,” என்று அவர் மேலும் கூறினார்.