பிரபல நடிகை நமிதாவின் கணவர், வீரேந்திர செளத்ரியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமிதாவின் கணவர் வீரேந்திரா சௌத்திரி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) கவுன்சில் அமைப்பின் தமிழ்நாட்டிற்கான தலைவராக இருக்கிறார்.
இந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தன்னிடம் ரூ.41 வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக சேலத்த சேர்ந்த கோபால்சாமி என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரையும் இவ்வழக்கில் தொடர்புடைய பிறரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், பண மோசடி புகார் குறித்த விசாரனைக்கு ஆஜராகும் படி நமிதாவின் கணவர் வீரேந்திர சௌத்ரி மற்றும் அவருடன் பணிபுரியும் இன்னொருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர்கள் இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இவர்களை கைது செய்யக்கூறி போலீஸாருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்.எஸ்.எம்.நேஷனல் புரமோஷன் கவுன்சில் எனும் மத்திய சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சில்என்ற அமைப்பின் தேசிய தலைவர் என குறிப்பிட்டு உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் என்பவர், தமிழகம் முழுவதும் பலரை ஏமாற்றியுள்ளார். இது, தமிழக பா.ஜ.,வில் பெரிய சலசலப்பைஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .