சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் கே நாராயணசாமியை(Narayanasamy)தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து உள்ளார்.
டாக்டர் கே நாராயணசாமி (Narayanasamy)தற்போது அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக உள்ளார். மருத்துவப் பணியில் 33 வருட அனுபவமும், மருத்துவக் கண்காணிப்பாளர், பல்வேறு அரசுத் திட்டங்களின் மாநில நோடல் அதிகாரி போன்ற பல்வேறு பதவிகளில் 13 ஆண்டுகள் நிறைவான நிர்வாக அனுபவமும் கொண்டவர்.
covidநோய் தொற்று காலத்தின் போது கிண்டியில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த அவர், தொற்றுநோய்களின் போது அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தமிழ்நாடு அரசால் விருது பெற்றார்.
டாக்டர் நாராயணசாமி(Narayanasamy)018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் ஹெபடாலஜி துறைக்கு இயக்குனராகவும் தலைமை தாங்கினார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் ஹெபடோபிலியரி சயின்ஸ் நிறுவனத்தை (IHBS) உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார் மற்றும் அதன் இயக்குநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.