நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ( nellai congress Leader ) மேலும் கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60) மரணம் தொடர்பான வழக்கில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சிகள், ஜெயக்குமாரின் ஒரு செல்போன், கருகிய டார்ச் லைட், கத்தி உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நடந்த விசாரணையும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
Also Read : சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து முக்கிய தகவலை ஆதித்யா எல்-1 விண்கலம்..!!
ஜெயக்குமாரின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு விஸ்ரா பரிசோதனைக்காக மதுரை மற்றும் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், கடந்த இருநாட்களாக ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் போக்கு மற்றும் விசாரணை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆகியோர் தொடர்ந்து நேரடியாக கண்காணித்து வருகின்றனர். வழக்கு விசாரணை விவரங்களை போலீசார், காவல்துறை வாட்ஸ் அப் குரூப்பில் பகிரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 நாட்களாக 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் விசாரித்தும் எவ்விதமான முன்னேற்றமான ( nellai congress Leader ) தகவலும் இல்லாததால், இந்த வழக்கு விசாரணை விரைவில் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.