நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4ஆம் ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனை என்று பெயர் பெற்ற நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டில் மட்டும் சுமார் 250 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இவர்களுக்கான மருத்துவ பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தன.
அதில் சென்னை கீழ்ப்பாக்கம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் MMC போன்ற கல்லூரிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தென் மாவட்டங்களான தூத்துக்குடியில் 65 சதவீத தேர்ச்சி விகிதமும் மதுரையில் 59 சதவீத தேர்ச்சி விகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி தேர்ச்சி விகிதம் வெறும் 55 சதவீதம் மட்டுமே பெற்று தற்போது கடைசி இடத்தில் உள்ளது.
தற்போது இளநிலை மருத்துவ பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களின் இந்த தேர்ச்சி விகிதங்கள் ஒட்டுமொத்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியையும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.
ஏனென்றால் தற்போது நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், அதாவது இறுதி ஆண்டு படிப்பை பயின்று வருபவர்கள் அடுத்த வருடம் உள்ளிருப்பு மருத்துவர்கள் என்னும்ஹவுஸ் சர்ஜன் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தற்பொழுது தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பது மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையே கவலைக்குரிய விஷயமாகி இருக்கிறது.

பொது அறுவை சிகிச்சை பாடப்பிரிவில் சுமார் 106 மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
எக்ஸ்டெர்னல் என்று சொல்லப்படக்கூடிய தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுகள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அடுத்த பத்து நாட்களுக்குள் சப்ளிமெண்டரி எக்ஸாம் என்று சொல்லப்படக்கூடிய துணை தேர்வுகள் வைத்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு தரமான சிகிச்சைகளை வழங்குவதில் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமனை என்று பெயர் எடுத்தது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
இங்கு இறுதி ஆண்டு படிக்கக்கூடிய மாணவர்களின் இந்த குறைவான தேர்ச்சி விகிதம் என்பது ஒட்டுமொத்த மருத்துவ கல்லூரியிலும் ஒரு கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.