கோவில்பட்டியில் அதிமுக வடக்குமாவட்ட அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kadampur-raju-01.jpg?resize=1024%2C576&ssl=1)
கோடையில் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து வைக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். அதன்பேரில், அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வருகின்றனர். இதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டியில் இனாம்மணியாச்சி பகுதியில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kadampur-raju-02.jpg?resize=1024%2C576&ssl=1)
இதனை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, பழம், மோர், பழரசம், ரஸ்னா,உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.
அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/04/kadampur-raju-04.jpg?resize=1024%2C576&ssl=1)
சிறந்த வாடிக்கையாளருக்கு பரிசு: கோவில்பட்டியில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வருகைதரும் சிறந்த வாடிக்கையாளருக்கு புதிய இருசக்கரவானம் வழங்கப்பட்டது. இங்குள்ள பிருந்தா சூப்பர் மார்க்கெட்டில் இந்த ஆண்டின் சிறந்த வடிக்கையாளராக தேர்வு செய்யப்பட்டவருக்கு, புதிய இருசக்கரவாகனத்தின் சாவியை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி பாராட்டினார்.