பிளஸ் 2 தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/mkstalin.jpeg?resize=680%2C648&ssl=1)
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தொடர்ந்து, இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள் என்று அவர்களுக்குள் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!