ஜோத்பூரில், மருத்துவர் ஒருவர் நாயின் வாயை துணியால் கட்டி, காரில் கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், மருத்துவர் ஒருவர் நாயின் வாயை துணியால் கட்டி நாய் நீண்ட கயிற்றில் கட்டப்பட்டு வாகனங்கள் செல்லும் சாலையில் நாயை கார் ஒன்று இழுத்துச் செல்லும் டாக்டர் ரஜ்னீஷ் குவாலா என்பவர் காரை ஓட்டிக் கொண்டே செல்கிறார்.
அந்த காரின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல், நாய் அங்கும் இங்கும் தள்ளாடி செல்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Trigger Warning! Video contains graphic animal abuse content.
An FIR has been registered in this regard based on the complaint filed by a Pukaar Animal Care Society. The dog has also been treated for injuries by Dog Home Foundation. https://t.co/QvuizSmqJm— Meet Ashar (@asharmeet02) September 18, 2022
இந்த நிலையில் நாய் நீண்ட கயிற்றில் கட்டப்பட்டு மற்ற வாகனங்கள் மீது மோதாமல் இருக்க போராடியது. ஏராளமான வாகனங்கள் செல்லும் சாலையில் நாயை கார் ஒன்று இழுத்துச் செல்லும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நாயை காருடன் கயிற்றால் கட்டி, அந்த சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் அறிவுறுத்தியும் காரை ஓட்டி வந்த மருத்துவர் காரை நிறுத்தவில்லை.
இதனை தொடர்ந்து நாயை காருடன் கயிற்றால் கட்டி, அந்த சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் அறிவுறுத்தியும் காரை ஓட்டி வந்த மருத்துவர் காரை நிறுத்தவில்லை. இறுதியாக, அப்பகுதியினர் காரை நிறுத்தி, நாய்க்கு கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தனர்.
இந்நிலையில் நாயை துன்புறுத்திய மருத்துவர் ரஜ்னிஷ் குவாலா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரஜ்னிஷின் மருத்துவருக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Our Team member is taking him in kennel without mask and he is not biting us…do you think he is aggressive? Comment Below @CP_Jodhpur @TheJohnAbraham @ashokgehlot51 @narendramodi @dcpwestjodhpur pic.twitter.com/Gw21pRwew8
— Dog Home Foundation (@DHFJodhpur) September 18, 2022
இதற்கிடையே மருத்துவரால் துன்புறுத்தப்பட்ட நாய்க்கு, உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மூலமாக நாய் கொண்டு செல்லப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.