சென்னையில் அனைத்து பள்ளிகளுக்குள் நாளை முதல் அரையாண்டு தேர்வு முடிவு பெறுவதால்அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை டிசம்பர் 11 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 21 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்று முடிந்தது.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்வு தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதியான இன்று வரை தேர்வு நடைபெற்றது.
இதனால் நாளை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.