கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பார்வையிட்டு தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி கள்ளச் சாராயம் குடித்ததில் முதல் நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம் என அடுத்தடுத்து ஏற்பட்டு கள்ளக்குறிச்சி விழுப்புரம் ,சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தில்6 பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் , அதிமுக , தேமுதிக, அமமுக, பாஜக உள்ளிட்ட தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர்.
தொடர்ந்து கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றவாளிகள் சின்னக்கண்ணு , ஜோசப் ராஜா , சின்னத்துரை உள்ளிட்ட 21 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை 3 பேர் கொண்ட விசாரணை குழுவுடன் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,” கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது.
விஷ சாராய சம்பவத்தில் 6 பெண்கள் பலியாகி இருப்பதை குறிப்பிட்டுள்ள மகளிர் ஆணையம், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் விஷ சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளச் சாராய உயிரிழப்பில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு பதிலளிக்கக் கூடியவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும். நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் தவறு நடந்துள்ளது தெரியவந்தது.
இங்குள்ள அதிகாரிகள் அது தெரிந்திருந்தும், தெரியாதது போல நடந்துள்ளனர். இதுபற்றி டெல்லி மகளிர் ஆணையத்தில் நாளை (ஜூன் 27) அறிக்கை அளிப்போம்.
சிபிசிஐடி மேற்கொண்டு வரும் விசாரணை தொடர்பாக எங்களுக்கு ஏதும் அறிக்கை தரவில்லை. இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாற்றதது ஏன் என்பது தெரியவில்லை.
இங்குள்ள அதிகாரிகள்தான் குற்றவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரிந்தும், தெரியாதது போல் நடிக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய குற்றம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,” முழு விசரணைக்கு பிறகு அனைத்து தகவல்களும் தெரிவிக்கபடும் என்று தெரிவித்தார்.