கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு பெயர் குழப்பத்தால் நிவாரண கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கண் பார்வை அற்றத்தாய் கதறி அழும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காட்டு நாயக்கர் தேர்வை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மகன் சுரேஷ். தந்தை உயிரிழந்த நிலையில் பார்வை திறன் குறைபாடு உடைய தாயுடன் வசித்து வருகிறார்.
மேலும் கள்ளக்குறிச்சி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து முதன் முதலாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: ”I LOVE YOU.. கட்டியணைத்த மாணவி..” நெகிழ்ந்த செளமியா அன்புமணி!வைரலாகும் வீடியோ!
ஆனால் உறவினர்கள் யாரும் இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.
45 வயதான சுரேஷிற்கு திருமணம் ஆகவில்லை. உரிய ஆவணங்கள் இல்லாததால் அரசின் நிவாரணம் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சுரேஷ் என்ற பெயரில் பலரும் இருந்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுரேஷின் தாய் கூறியதாவது, தன்னுடைய மகனின் இறுதிச்சடங்கள் அனைத்து உறவினர்களும் தான் எடுத்து செய்தார்கள்.. எனக்கு கண் பார்வை குறை உள்ளது. மேலும் என்னை பார்த்துக்கொள்ள எந்த ஒரு ஆதரவும் கிடையாது.
அரசு அதிகாரிகள் தனக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதார் இந்த சம்பவம் பார்ப்போர் மனதை உருபுலைய வைத்துள்ளது
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கள்ள சாராயம் குடித்துஅதிக அளவில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது