ஓணம் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் வருவதால், கேரள மக்கள் அதை ஓணம் பண்டிகையாக வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். மேலும் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, ஆலாள், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்களில் ஓணம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை சிறப்பு:
கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த நிலையில் ஓணம் பண்டிகையில் மகாபலி பூமிக்கு வருவார் என்று அம்மாநில மக்கள் நம்புகிறார்கள். இதற்காக அவரை வரவேற்கும் விதமாக மொத்தம் 10 நாட்கள் இந்த ஓணம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மக்களைப் பார்க்க வரும் மன்னன் மகாபலிக்கு வண்ண மலர்களால் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த ஓணம் பண்டிகை கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் கேரள மக்கள் வாழும் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். தமிழ்நாட்டிலும் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், மாநில எல்லையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் உள்ளவர்களும் விழாவை கொண்டாடும் வகையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரியில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் திரும்பபெறப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.