தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்கள் அமைச்சராவதற்கு முக்கிய தகுதியே ஊழல் செய்திருக்க வேண்டும் என்கிற அவல நிலை இருப்பதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஆளுநரும், பாஜக மக்களவை தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தராஜன் வேலூர் அருள்மிகு ஸ்ரீலஷ்மி நாராயணி தங்க கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மக்கள் சென்னையில்
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், செய்தியாளரிடம் பேசியவர், தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். பேருந்தில் பயணம் செய்தால் இருக்கைக்கு அடியில் கத்தி, அருவா போன்ற ஆயுதங்கள் இருக்கிறதா என்று நான் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதையும் படிங்க: ”இனி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு..”தமிழக அரசு அறிவிப்பு..! மக்களே மிஸ் பண்ணாதீங்க..
மக்களின் மீது அக்கறை தமிழக அரசிடம் குறைந்து வருகிறது என குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும்.
தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அமைச்சராவதற்கு முக்கிய தகுதியே ஊழல் செய்திருக்க வேண்டும் என்கிற அவல நிலை இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டம் மூலமாக தொடரும் உயிரிழப்புகள் அதிகமாவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ஆன்லைன் சூதாட்டத்தில் சட்டரீதியாக இதில் பிரச்சனை உள்ளது. இதை சட்ட ரீதியாக அணுக வேண்டும்.
இளைஞர்களுக்கு நான் கேட்டுக் கொள்வது சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் உயிரை இழக்கக்கூடாது என தெரிவித்தார்