மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
2023 ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் தேமுதிக கட்சி நிறுவனர், எதிர்க்கட்சித் தலைவர் என பிரபல அரசியல் தலைவராகவும் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 28 ஆம் தேதி காலை 6:10 மணிக்கு உயிரிழந்தார்.
விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்கள் மற்றும் தமிழக அரசியல் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் அவரது உடல், சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: vijayakanth – விஜயகாந்த்திற்கு திருவுருவச்சிலை!!
தொடர்ந்து விஜயகாந்தின் சமாதி கோயிலாக மாற்றப்படும் என அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா உறுதி அளித்த நிலையில், ஏராளமான மக்கள் தொடர்ந்து இங்கு வழிபட, அன்னதானம் உள்ளிட்ட விஜயகாந்தின் சேவைப் பணிகள் இங்கு தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில்,மறைந்த விஜயகாந்தின் பணிகளைப் பாராட்டி அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்க மத்திய அரசு அறிவித்து இருந்தது. தொடர்ந்து நேற்று டெல்லியில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்த் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த்,” சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் பத்மபூஷண் விருதினை வைத்து பிரேமலதா அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா, “விஜயகாந்துக்கு காலம் தாழ்ந்து கிடைத்தாலும் விருதினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கி நன்றி. என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.