கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வந்த நபர் ஒருவர் பெண் மருத்துவரை (woman doctor) கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொட்டாரகரை தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 25 வயதாகும் வந்தனா என்ற பெண் மருத்துவர் (woman doctor) சம்பவத்தன்று வழக்கம் போல பணியில் இருந்துள்ளார்.
அப்போது சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட 45 வயதாகும் சந்தீப் என்ற நபர் சம்பவத்தன்று அதிகாலை 5 மணி அளவில் பணியில் இருந்த மருத்துவர் வந்தனாவை கத்தரிக்கோலால் கொடூரமாக பல முறை குத்தி உள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்த காவல் துறையினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கட்டி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்தின் போது சந்தீப்பின் தாக்குதலால் அவரை பிடிக்கச் சென்ற 5 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
அதனையடுத்து, படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம் பெண் மருத்துவரை திருவணந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், மருத்துவர் வந்தனா பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.