இந்தியாவில் பிறந்த யாரும் நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக ( CAA ACT ) சிஏஏ சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றமாட்டியுள்ளார் .
சிஏஏ சட்டம் குறித்து செல்வப்பெருந்தகை இன்று அளித்துள்ள பேட்டியில் கூறிருப்பதாவது :
இந்திய மக்கள் ஒருபோதும் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காகவே சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது. ஏற்கனவே நாட்டில் பல ( CAA ACT ) பிரச்சனைகளை முடுக்கிவிட்டிருக்கும் பாஜக அரசு தற்போது இதையும் கொண்டு வந்து மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.