சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், 137 நாட்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. பெட்ரோல் விலை ரூ.110 வரை உயரந்ததோடு டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கியது.
மத்திய அரசு பெட்ரோல் – டீசல் மீதான வரியை குறைத்ததையடுத்து அவற்றின் விலை சற்று குறைந்தது. அதன்படி இந்தியாவில் கடந்த 136 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் போக்குவரத்து கழகம், தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்படும் டீசல் விலையை ரூ.25 உயர்த்தியது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.116.88க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவவம்பர் 5ஆம் தேதி முதல் 137 நாட்களாக தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81க்கு விற்கப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.76 காசு உயர்த்தப்பட்டு 92.65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.