பிரதமர் மோடியின் வெறுப்புப்பேச்சை ஒருபோதும் ஏற்கமுடியாது என ( mks vs pmmodi ) தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
மக்களின் கோபத்துக்கு அஞ்சி பிரதமர் மோடி மதவெறியை தூண்டுகிறார். மோடியின் தோல்விகளை அம்பலப்படுத்துவதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்
மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் வகையில் விஷமத்தனமாக மோடி பேசியுள்ளார். வெறுப்பும் பாகுபாடும்தான் மோடி வழங்கும் உண்மையான உத்தரவாதங்கள்.
சமூக, பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலமே சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும்
மோடியின் அப்பட்டமான வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாக்கிகொள்ளவே இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறையில் நடுநிலையை கைவிட்டு விட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் சமுக ரீதியில் பிந்தங்கியவர்கள் உரிய பங்கை பெறுவதை மோடி தடிக்கிறார்.
பாஜகவின் திசைதிருப்பும் உத்திகள் குறித்து இந்தியா ( mks vs pmmodi ) கூட்டணித் தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.