தொகுப்பாளர் டிடி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், விஜய் டிவியில் பல வருடங்களாக தான் தொகுப்பாளராக இருந்த நிலையில், தற்போது ஏன் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவில்லை என்பது பற்றியும், தற்போது சினிமாவில் தான் சந்திக்கும் சவால்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் டிடி.
அப்போது பேசிய டிடி..
“விஜய் டிவி என்னை ஒதுக்கி விட்டது. அதோடு காலில் ஏற்பட்ட பிரச்சனையால் என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது. வாக்கிங் ஸ்டிக் அல்லது வீல் சேர் மூலம் தான் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக நிற்காமல் ஓட முடிந்த என்னால் இப்போது நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இதனால் நான் அதிகமாக இப்போது வெளியே செல்வது இல்லை. எனக்கு வந்துள்ள இந்த நோயை குணப்படுத்தவும் முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். எனக்கு எப்போதுமே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் எதுவும் செய்யாமல் இருப்பது பிடிக்காது.
அடுத்தடுத்து நான் எவ்வளவு படித்தாலும் என்னுடைய வேலை எனக்கு ரொம்பவே முக்கியம். இத்தனை ஆண்டுகளாகவே நான் வேலை செய்த விஜய் டிவியில் என்னால் இப்போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை.
ஏனெனில், விஜய் டிவியில் அமர்ந்து கொண்டு செய்யும்படி எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று கூறி விட்டார்கள். அதற்கு பிறகு தான் நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறேன்.
மேலும், கடந்த வாரத்தில் கூட ஐந்து நாட்கள் வீட்டில் இருந்த போது எனக்கு பைத்தியமே பிடிப்பது போன்று ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.