கடலூர் அருகே பெத்தாங்குப்பம் கிராமத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயடைந்தனர்.
கடலூர் அருகே பெரியப்பட்டு என்ற பகுதியில் பரணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பெத்தாங்குப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகிறனர்.
அவர்களை அந்த கிராமத்திற்கே சென்று பள்ளி வேனில் அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது ரயில்வே கேட்டில், பேருந்தை நிறுத்திய, அந்த பேருந்தில் ஓட்டுநர் கீழே இறங்கி போன் பேசிகொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி வேனில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எதிர்பாராத விதமாக கியர் பாக்சில் கை வைத்ததால் அந்த வேன் பின்புறமாக சென்று தண்டவாளம் அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துஇதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர்.
கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தாதால் காயமடைந்த பள்ளிக் குழந்தைகள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் பேருந்தின் கண்ணாடியை உடைந்து குழந்தைகளை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். ஓட்டுநரின் அலட்சியத்தால் தான் விபத்து நடந்தததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.